திருவண்ணாமலை எஸ்.பி அரவிந்த் உத்தரவின்படி¸ ஏ.டி.எஸ்.பி அசோக் குமார் மேற்பார்வையில்¸ திருவண்ணாமலை ஏ.எஸ்.பி கிரண் ஸ்ருதி தலைமையில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் பெரிய கோலாப்பாடி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த மகேந்திரா பொலிரோ வேன் மற்றும் இண்டிகா கார் ஆகியவற்றை நிறுத்தி சோதனை நடத்தினர். 2 வாகனங்களிலும் பூ முட்டைகளை அடுக்கி அதன் அடியில் ஹான்ஸ் குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2லட்சத்து 75ஆயிரம் ஆகும்.
கடத்தலில் ஈடுபட்ட அய்யம்பாளையம் புதூரைச் சேர்ந்த பாலாஜி(31)¸ பள்ளிப்பட்டைச் சேர்ந்த சந்திரன்(43)¸ துர்க்கைநம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த முருகதாஸ்(30)¸ செங்கம் பகுதியைச் சேர்ந்த கணேஷ்¸ காதர் சபி¸ நவ்ஷத் அலி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிரு;நது ரூ.12 லட்சம் ரொக்கப் பணம்¸ ரூ.6 லட்சம் மதிப்புள்ள வேன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
துடிப்பான இளம் பெண் அதிகாரியான கிரண் ஸ்ருதி பொறுப்பேற்ற பிறகு நடத்தப்பட்ட பெரிய வேட்டை இது என்பது குறிப்பிடத்தக்கது. கிரண் ஸ்ருதியின் அதிரடி நடவடிக்கை கடத்தல்காரர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.



